Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெறிநாய்களிடம் மாட்டிக் கொண்ட தனுஷ் பட நாயகி... தலையைக் கடித்துக் குதறின!
மும்பை: பிரபல கன்னட நடிகை பாருல் யாதவை மும்பையில் வெறிநாய்கள் தாக்கி, கடித்துக் குதறின. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கன்னடப் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பாருல்யாதவ். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக 'ட்ரீம்ஸ்' படத்தில் நடித்துள்ளார்.
புலன் விசாரணை இரண்டாம் பாகத்தில் பிரசாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வீரப்பன் வாழ்க்கை கதை படத்தில் அதிரடிப்படையினருக்கு வீரப்பனை காட்டிக்கொடுக்கும் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தான்.
பாருல் யாதவ் குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார். இவர் தான் வளர்க்கும் வெளிநாட்டு நாயுடன் தினமும் வாக்கிங் போவது வழக்கம். நேற்றும் வீட்டுக்கு அருகே நாயுடன் வாக்கிங் போனபோது, அவரது நாயை 6 தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்தன.
அவற்றிடம் இருந்து நாயைக் காப்பாற்ற பாருல் யாதவ் முயன்றார். அப்போது அந்த 6 நாய்களும் பாருல் யாதவ் மீது பாய்ந்து அவரை உடம்பு முழுவதும் ஆவேசமாகக் கடித்து குதறின.
பாருல் யாதவ் அலறலைக் கேட்ட பக்கத்து அடுக்குமாடி குடியிருப்புவாசி ஒருவர் ஓடிவந்து நாய்களை விரட்டினார். பாருல் யாதவ் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தலையில் ஆழமாக நாய்களின் பற்கள் பதிந்துள்ளதால் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.