Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கூலிங் கிளாஸ் அணிந்த “தேவசேனா”... வித்தியாசமான போட்டோவை வெளியிட்ட ‘காதலன்’ பாகுபலி!
சென்னை: கடந்த வாரம் சனிக்கிழமை தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார் நடிகை அனுஷ்கா.
தமிழில் ரெண்டு படம் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா. முதல்படம் சொல்லிக் கொள்கிற விதத்தில் அமையாவிட்டாலும், அருந்ததி படம் நல்ல அடையாளத்தை அவருக்குக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து லிங்கா, என்னை அறிந்தால், வேட்டைக்காரன், சிங்கம் என தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார் அவர்.
சமீபத்தில் வெளியான பாகுபலி படம் அனுஷ்காவின் புகழை மேலும் அதிகமாக்கியது. அதனைத் தொடர்ந்து ஆண் வேடம் ஏற்று துணிச்சலாக அனுஷ்கா நடித்திருந்த ருத்ரமாதேவி படம், அனுஷ்காவின் ரசிகர்களுக்கு மேலும் விருந்தாக அமைந்தது. அனுஷ்காவிற்கு கட்-அவுட் அமைத்து அபிஷேகம் பண்ணி ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
பாகுபலி நாயகி...
யோகா டீச்சராக வாழ்க்கையைத் துவக்கிய அனுஷ்கா, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்காவின் காட்சிகள் குறைவு. எனவே, இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிறந்தநாள்...
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார் அனுஷ்கா. அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்கள் வழியாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பிரபாஸ்...
அந்தவகையில் பாகுபலி நாயகனான பிரபாஸ், பாகுபலி பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வித்தியாசமான புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, அனுஷ்காவிற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லியுள்ளார்.
தேவசேனா...
பாகுபலி படத்தில் தேவசேனா என்ற ராணி வேடத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. முதல்பாகத்தில் அவர் சிறைபிடிக்கப் பட்டு இருப்பது போலவும், மகன் சிவ் வந்து அவரை மீட்டுச் செல்வதும் காட்சிகளாக சொல்லப்பட்டது.
கூலிங் கிளாஸ்...
அப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் இது உள்ளது. அழுக்கு உடை அணிந்து, கையில் விலங்கிட்ட நிலையில் அனுஷ்கா நிற்க, அவரின் உடைக்கு சற்றும் பொருந்தாத கூலிங் கிளாஸ் அவர் கண்களில் மாட்டப்பட்டுள்ளது. அருகிலேயே பிரபாஸ். அவரும் சேறு பூசிய உடலுடனேயே காணப்படுகிறார்.
இனிமையான பெண்...
இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, 'நான் பார்த்ததிலேயே மிகவும் இனிமையான பெண்ணான அனுஷ்காவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என பிரபாஸ் குறிப்பிட்டுள்ளார்.
காதல்...?
ஏற்கனவே, பாகுபலி படத்தின் ஷூட்டிங் போது அனுஷ்காவிற்கும், பிரபாஸுக்கும் காதல் மலர்ந்து விட்டதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.