Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இப்படியா பண்ணுவாங்க? அவங்க லெவலுக்குலாம் நான் கீழ இறங்க விரும்பலை... 'பிசாசு' ஹீரோயின் விர்ர்ர்
சென்னை: அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு ஒருவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிப்பது மோசமானது என்று நடிகை பிரயாகா மார்டின் தெரிவித்துள்ளார்.
தமிழில், மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் நடித்தவர் பிரயாகா மார்ட்டின். இந்தப் படத்துக்குப் பிறகு சில படங்களுக்கு அவர் பேசப்பட்டார். ஆனால், தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மலையாளத்தில் மோகன்லாலில் சாகர் அலைஸ் ஜாக்கி ரீலோடட், உஸ்தாத் ஓட்டல், ஒரு முறை வந்து பார்த்தாயா, ராம்லீலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடுமையானவை
கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் சினிமாவையும் நடிகர், நடிகைகளையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தப் போக்கு சமீபத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால், டிசாஸ்டர் என்றும் குப்பை என்றும் கூறிவருகின்றனர். 'விமர்சனங்களை ஏற்கிறோம், ஆனால் இதுபோன்ற வார்த்தைகள் கடுமையானவை' என்று நடிகர், நடிகைகள் கூறி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள்
இருந்தும் இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. பிரபல முன்னணி நடிகர், நடிகைகளும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றனர். ஏதாவது சின்ன காரணம் கிடைத்தாலும் அதை வைத்து, சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது அதிகரித்து வருகிறது. இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
டிசாஸ்டர்
இந்நிலையில் இதில் 'பிசாசு' நடிகை பிரயாகாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, டிசாஸ்டர் என்ற வார்த்தையை வெறுக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, 'குறிப்பாக என்னை பற்றிய டிரோல்களில் பலர் இந்த வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பலர் எதிர்மறையான கருத்துக்களை மற்றவர்கள் மீது வைக்கின்றனர்.
பாதிக்கப்பட்டிருக்கிறேன்
இதுபோன்று அவமானப்படுத்தும் விதமாக யாரையும் நாம் பேசுவதில்லை. அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு ஒருவரை இப்படி கடுமையாக விமர்சிப்பது மோசமானது. தனிப்பட்ட முறையில் நானும் ட்ரோல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என்னை கடுமையாக விமர்சிப்பவர்களின் தரத்துக்கு நானும் இறங்க விரும்பவில்லை என்பதால் ட்ரோல்களை நான் புறக்கணிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கன்னடத்திலும்
இவர் இப்போது நடித்துள்ள பூமியிலே மனோஹரா ஸ்வகர்யம் என்ற மலையாளப் படம் அடுத்து வெளிவர இருக்கிறது. சைஜூ அந்திக்காடு இயக்கியுள்ள இதில் தீபக் பரம்போல் ஹீரோவாக நடித்துள்ளார். மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வரும் பிரயாகா, சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழிலும் நடிக்க இருக்கிறார்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!