Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கைக் காசைப் போட்டு "முத்துராமலிங்கத்தை" மீட்ட பிரியா ஆனந்த்
சென்னை: முத்துராமலிங்கம் படப்பிடிப்பில் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் நடிகை பிரியா ஆனந்த் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வந்த படம் முத்துராமலிங்கம். புதுமுக இயக்குநர் ராஜதுரை இயக்கி வரும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் தயாரிப்புத் தரப்பின் சொதப்பல் காரணமாக இப்படம் பாதியில் நிற்கும் அபாயம் தற்போது உருவாகியுள்ளது.
முத்துராமலிங்கம்
'வை ராஜா வை' படத்திற்குப் பின் 'முத்துராமலிங்கம்' படத்தில் கவுதம் கார்த்திக்- பிரியா ஆனந்த் ஜோடி மீண்டும் இணைந்திருக்கிறது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார்.
கமல்ஹாசன்
இப்படத்திற்காக 'தெற்கு தேச சிங்கமடா' என்ற ஒரு பாடலை சமீபத்தில் கமல்ஹாசன் பாடியிருந்தார். மேலும் கார்த்திக், பிரபு ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கவிருந்தனர்.
குற்றாலம்
முத்துராமலிங்கம் முதற்கட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதிகளில் நடந்து வந்தது. அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு ஒட்டுமொத்த படக்குழுவும் கிளம்புகிற வேளையில், தயாரிப்புத் தரப்பு ஹோட்டலுக்கான பில்லை செலுத்தவில்லையாம். இதனால் கட்டணத்தை கொடுத்து விட்டு கிளம்புமாறு ஹோட்டல் தரப்பு கூறிவிட, படக்குழு செய்வதறியாமல் தவித்து நின்றதாம். இந்த செய்தி நாயகி பிரியா ஆனந்தின் காதுகளை எட்ட அவர் சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய வங்கியிலிருந்து பணத்தைக் கொடுத்து அவர்களை மீட்டிருக்கிறார்.
படப்பிடிப்பு தொடருமா?
தயாரிப்புத் தரப்பின் இந்த சொதப்பலால் படம் மேற்கொண்டு வளருமா? என்பதே சந்தேகம்தான் என்கின்றனர். ஆனால் படம் வளருமோ இல்லையோ என்று துளியும் கவலைப்படாமல், தனது படத்தைக் கொடுத்த பிரியா ஆனந்தின் செயல் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்