Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
3 முறை தற்கொலைக்கு முயன்றேனா?: மவுனம் கலைத்தார் நடிகை பிரியங்கா சோப்ரா
மும்பை: பாலிவுட்டில் போராடும் காலத்தில் தான் தற்கொலை செய்ய முயன்றதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரதியுஷா பானர்ஜி தற்கொலை செய்து கொண்டபோது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் முன்னாள் மேனேஜர் ஜாஜு ட்விட்டரில் புதிய தகவலை வெளியிட்டார்.
அதாவது பிரியங்கா பாலிவுட்டில் ஜொலிக்க போராடிக் கொண்டிருந்தபோது மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார்.
பிரியங்காவின் அம்மா
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா பற்றி ஜாஜு கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இது குறித்து அறிந்த பிரியங்காவின் தாயோ ஜாஜுவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
பிரியங்கா
தான் தற்கொலைக்கு எல்லாம் முயற்சி செய்யவில்லை என்று பிரியங்கா சோப்ரா தற்போது தெரிவித்துள்ளார். ஜாஜு குற்றம்சாட்டியபோது அவர் ஹாலிவுட் டிவி தொடர் மற்றும் படத்தில் நடிக்க அமெரிக்காவில் இருந்தார்.
மீடியாக்கள்
எனக்கு தொல்லை கொடுத்ததற்காக சிறையில் இருந்த ஒருவர் கூறியதை இந்திய ஊடகங்கள் அப்படியே நம்புவது வருத்தம் அளிக்கிறது. சொல்வது யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை பார்க்க வேண்டாமா. அவர் தெரிவித்த தகவலில் உண்மை இல்லை என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.
பத்ம ஸ்ரீ
பிரியங்கா சோப்ரா தற்போது ராக் நடிக்கும் பேவாட்ச் படத்தில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நாடு திரும்பிய அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.