Don't Miss!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பின்னாலேயே வருகிறார்: 'சைக்கோ' ரசிகரால் பயத்தில் இருக்கும் டாப்ஸி
மும்பை: தான் எங்கு சென்றாலும் தன்னை பின்தொடரும் சைக்கோ ரசிகர் மீது போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார் நடிகை டாப்ஸி.
ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் டாப்ஸி. தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது டாப்ஸி இந்தி படங்களில் பிசியாக உள்ளார். டாப்ஸிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் ஒரு சைக்கோ ரசிகரால் அவர் மனம் நொந்து போயுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ரசிகர்கள்
எங்கள் எல்லாருக்கும் ரசிகர்களை மிகவும் பிடிக்கும். என்னையும், என் படங்களையும் மக்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் எனது பிரைவசியும் முக்கியும், அதையும் ரசிகர்கள் மதிக்க வேண்டும்.
பயம்
யாராவது எல்லை தாண்டி நடந்து கொண்டால் பிறரை போன்று நாங்களும் அஞ்சுவோம். ஒரு ரசிகர் நான் எங்கு சென்றாலும் என்னை பின் தொடர்ந்து வருகிறார். அவர் என்னிடம் பேசியுள்ளார்.
பின்தொடர்தல்
அந்த குறிப்பிட்ட ரசிகர் நான் படப்பிடிப்பில் இருந்தபோது பாதுகாவலர்களை எல்லாம் தாண்டி வந்து என்னை சந்தித்தார். அது எனக்கு பயத்தை அளித்தது.
போலீஸ்
அவர் இதுவரை என்னை காயப்படுத்தியது இல்லை. அதனால் நான் போலீசில் புகார் அளிக்கவில்லை. ஆனால் இனியும் அவர் என்னை பின்தொடர்ந்தால் நிச்சயம் போலீசில் புகார் அளிப்பேன்.