Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை! ராதிகா ஆப்தே
ரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை, அன்பானவரை நான் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி... பார்த்ததே இல்லை என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
கபாலியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அதற்கு முன் தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்தார். சில தெலுங்குப் படங்களிலும், ஏராளமான இந்திப் படங்களிலும் அவர் நடித்திருந்தார். பல சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து பரபரப்பு கிளப்பிய ராதிகா ஆப்தே, சமீபத்தில் தன்னிடம் சிலுமிஷம் செய்த தெலுங்கு ஹீரோ ஒருவரை அறைந்துவிட்டதாகக் கூறி அதிர வைத்தார். அந்த நடிகர் தெலுங்கு சினிமாவில் அதிகாரமிக்கவர் என்றும் அடையாளம் காட்டினார்.
இந்த நிலையில் கபாலியில் நடித்த அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் கபாலி. குறிப்பாக ரஜினிகாந்த். மிக அருமையான, அற்புதமான மனிதர் அவர். இப்படி ஒருவரை நிஜத்திலும் சரி, திரையிலும் சரி நான் சந்தித்ததே இல்லை. அவரது படப்பிடிப்பு மாதிரி ஒழுங்கான பாதுகாப்பான படப்பிடிப்புகள் அரிது," என்று கூறியுள்ளார்.