Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இவ நடிச்சா படம் ஊத்திக்கும்னு சொன்னாங்க: நடிகை ராகுல் ப்ரீத் சிங்
ஹைதராபாத்: தான் சில படங்களில் நடிக்காமல் போனது நல்ல வேளை என்று நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
தடையற தாக்க படம் மூலம் கோலிவுட் வந்தவர் பஞ்சாபி பொண்ணான ராகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் அவர் நடித்த படங்கள் ஓடவில்லை.
இந்நிலையில் அவர் படங்கள் குறித்து கூறுகையில்,
அதிர்ஷ்டமில்லை
சினிமாவில் யார் நிலைமை எப்பொழுது எப்படி ஆகும் என்றே கூற முடியாது. கடந்த ஆண்டு 3 படங்கள் தோல்வி அடைந்தன. உடனே என்னை அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று கூறி ஒதுக்கினார்கள். ராகுல் ப்ரீத் நடித்தாலே அந்த படம் ஊத்திக்கொள்ளும் என்றார்கள்.
போராட்டம்
அதிர்ஷ்டமில்லாதவள் என்று கூறி ஒதுக்கியதால் நான் துவண்டு போகவில்லை. நம்பிக்கையோடு நடித்தேன். அதன் விளைவாக அண்மையில் வெளியான என் படங்கள் ஹிட்டாகியுள்ளன.
பட வாய்ப்பு
தமிழ் மற்றும் தெலுங்கில் எனக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. என்னை அதிர்ஷ்டமில்லை என்று கூறி ஒதுக்கியவர்களே தற்போது என்னை தேடி வருகிறார்கள். தற்போது வெளியாகி தோல்வி அடைந்த பல படங்கள் என்னை தேடி வந்தவை. அவற்றில் நடிக்க மறுத்தேன்.
குழந்தைகள்
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளேன். மேலும் பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன்.