வரலட்சுமி, அந்த ஆளு பேரச் சொல்லுமா, பாடம் கற்பிப்போம்: ரசிகர்கள் கொந்தளிப்பு
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரின் பெயரை வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தன்னிடம் முறையற்ற விதத்தில் பேசியதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த பலரும் வரலட்சுமியின் துணிச்சலை பாராட்டியுள்ளனர்.
ரூபா மஞ்சரி
@varusarath நீங்கள் எங்களுக்காக பேசியுள்ளீர்கள்...இது குறித்த கருத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என பல காலம் நினைத்தேன்... நீங்கள் முதலில் பேசியதில் மகிழ்ச்சி என நடிகை ரூபா மஞ்சரி தெரிவித்துள்ளார்.
பாடம்
அந்த நபர் மற்றும் சேனலின் பெயரை நீங்கள் தெரிவிக்க வேண்டும் வரலட்சுமி. அவர்களுக்கு இளைஞர்களாகிய நாங்கள் நல்ல பாடம் கற்பிப்போம் என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
பெயரை சொல்லு
@varusarath நீதான் தைரியமான பொன்னாச்சே பேர சொல்லு..
துணிச்சல்
@varusarath பேசாப் பொருளைப் பேசத் துணிந்ததே பெரும் விஷயம்!
உங்களுக்கே
@varusarath உயரதட்டு உங்களுக்கே அப்டினா அடிதட்டு & உங்க இடத்துக்கு வர நினைப்பவர்களுக்கு...???
போலீஸ்
@varusarath நீங்கள் போலீசில் புகார் அளித்து அந்த நபரின் பெயரை வெளியிட வேண்டும். இல்லை என்றால் இது தொடரத் தான் செய்யும்.


Click it and Unblock the Notifications











