Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோயின்
சென்னை:
100 படங்களில் நடித்த நடிகை ரோஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது.
செம்பருத்தி படம் மூலம் தமிழ்த் திரைப்படவுலகில் நுழைந்தவர் நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.
100 படங்களில் நடித்து முடித்து விட்ட நடிகை ரோஜாவுக்கு, திரை உலகினர் பாராட்டு விழா நடத்துகிறார்கள். இந்த விழா வரும் 31 ம் தேதி மாலை4.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது:
100 படங்களில் நடித்து முடித்து விட்ட ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதைப் பாராட்டு விழா என்று கூறுவதை விட நன்றிதெரிவிக்கும் விழா என்று கூறலாம்.
விழா மாலை 4.15 க்குத் தொடங்கி தொடர்ந்து 5 மணி நேரம் நடக்கும். விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். நடிகர், நடிகைகள்,டைரக்டர்கள், படஅதிபர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
பாராட்டு விழாவில் டான்ஸ் மாஸ்டர் லலிதா மணி குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெறும். இதில் நடிகைகள் மந்த்ரா, மும்தாஜ், ப்ரீதா, தேவயானி,கோவை சரளா நடிகர்கள் விவேக், வினீத், வடிவேலு, லாரன்ஸ் ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.
நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், பிரபு, கார்த்திக், சத்யராஜ், அர்ஜூன், முரளி, விஜய், நெப்போலியன், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர்பங்கேற்கிறார்கள்.
அதோடு அழகிகளின் ஆடை அணிவகுப்பு போட்டியும் நடக்கிறது. சிறந்த அழகியை டைரக்டர்கள் பாரதிராஜா, விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார்,ஆர்.கே.செல்வமணி, பி.வாசு, கஸ்தூரி ராஜா ஆகியோர் தேர்ந்தெடுத்து க்ரீடம் சூட்டுகிறார்கள். ரோஜா ஏற்புரை நிகழ்த்துகிறார் என்றார் செல்வமணி.