Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹீரோயின்
செக் மோசடி வழக்கில் நடிகை ரோஜாவுக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டுள்ளது.
பிடிவாரண்ட்டை அக்டோபர் 10ம் தேதிக்குள் வந்து அவர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதுவரை ரோஜாவைக்கைது செய்யத் தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முரளி மோகன் ரெட்டி என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ரோஜா தன்னிடம்ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், அதற்காக ரோஜா தன்னிடம் கொடுத்திருந்த செக் வங்கியிலிருந்துதிரும்பி வந்து விட்டதாகவும் கூறி வழக்குத் தாடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 18ம் தேதிவிசாரணைக்கு வந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டிருந்த ரோஜா அன்றுகோர்ட்டில்ஆஜராகவில்லை. இதையடுத்து ரோஜாவுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டைநீதிபதி பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து ரோஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.தான் வெளிநாட்டில் இருப்பதால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்று அம்மனுவில் ரோஜா விளக்கம்கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் அக்டோபர்10ம் தேதிக்குள் ரோஜா நேரில் வந்து பிடிவாரண்ட்டைபெற்றுக் காள்ள வேண்டும். அதுவரை அவரைக் கைது செய்யத் தேவையில்லை என்று உத்தரவிட்டார்.
தற்போது சுவிட்சர்லாந்தில் கணவர் செல்வமணியுடன் தேனிலவு கொண்டாடி வரும் ரோஜாவுக்கு இந்த உத்தரவின்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.