Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது : நடிகை ரோஜா
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது ஹைதராபாத் சஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹைதராபாத் வந்துள்ள நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சோனியா காந்தி தனது அரசியல் எதிரிகளை சிபிஐ மூலம் பழி தீர்த்து வருகிறார். எங்கள் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியதால் கடும் ஆத்திரத்தில் உள்ளார். முன்பெல்லாம் சிபிஐ மீது நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிபிஐ சோனியா காந்தியின் கைப்பாவையாக செயல்படுகிறது.
ஜெகனை பழிவாங்குவதற்காக தனது கைப்பாவையான சிபிஐ போலீசார் மூலம் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். இடைத்தேர்தலில் ஜெகன் பிரச்சாரம் செய்தால் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்று கருதி அவர் கைது செய்துள்ளார். சோனியா காந்தியின் பழிவாங்கும் போக்கை ஆந்திர மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். இந்த தேர்தலில் அவர்கள் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவார்கள். நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. 18 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு டெபாசிட் கிடைக்காது என்றார்.