Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சம்பளம் வேண்டாம் படத்தில பங்கு தாங்க – ஒரே போடாக போடும் நடிகை அனுஷ்கா!
ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா தற்போது ஒரே நேரத்தில் பாகுபலி மற்றும் ருத்ரம்மா தேவி என இரண்டு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இதில் முதலில் ருத்ரம்மா தேவி படம் வெளிவர இருக்கிறது. 3 D படமாக வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு இந்தப் படத்தில் ராணி வேடத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது, போதாதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் இதில் ஒரு சிறப்பு வேடத்தில் வருகிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இப்படம் ஓரளவு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் நடிப்பதற்கு இதுவரையில் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கும் அனுஷ்கா அதற்குப் பதில் படத்தின் லாபத்தில் பங்கு கேட்கிறாராம்.
படம் எப்படியும் நல்ல லாபத்தைக் கொட்டிக் கொடுக்கும் அதனால் சம்பளம் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கும் அனுஷ்கா, வசூலில் ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்பார்க்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.