சம்பளம் வேண்டாம் படத்தில பங்கு தாங்க – ஒரே போடாக போடும் நடிகை அனுஷ்கா!
ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா தற்போது ஒரே நேரத்தில் பாகுபலி மற்றும் ருத்ரம்மா தேவி என இரண்டு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இதில் முதலில் ருத்ரம்மா தேவி படம் வெளிவர இருக்கிறது. 3 D படமாக வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு இந்தப் படத்தில் ராணி வேடத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது, போதாதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் இதில் ஒரு சிறப்பு வேடத்தில் வருகிறார். மற்றும் ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இப்படம் ஓரளவு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் நடிப்பதற்கு இதுவரையில் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கும் அனுஷ்கா அதற்குப் பதில் படத்தின் லாபத்தில் பங்கு கேட்கிறாராம்.

படம் எப்படியும் நல்ல லாபத்தைக் கொட்டிக் கொடுக்கும் அதனால் சம்பளம் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கும் அனுஷ்கா, வசூலில் ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்பார்க்கிறார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











