Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மலர் டீச்சர் இனி ‘டாக்டர்’!
சென்னை: பிரேமம் பட புகழ் நடிகை சாய் பல்லவி தற்போது தனது மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராகியுள்ளார்.
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழில் முன்னணி நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்க, தமிழகத்தில் இருந்து போய் மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறவர் இவர்.
பிரேமம் பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் சாய் பல்லவி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜார்ஜியாவில் மருத்துவம் படிக்க பறந்தார் சாய் பல்லவி.
மணிரத்னம் படம்..
தனது படிப்பிற்கு இடையே மலையாளத்தில் களி படத்தில் நடித்தார் சாய் பல்லவி. பின்னர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது.
கதையில் மாறுதல்...
ஆனால், கதையில் ஏற்பட்ட சில மாறுதல்களால் மணிரத்னம் படத்தில் இருந்து விலகினார் சாய் பல்லவி. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உரிய விளக்கமும் அவர் அளித்திருந்தார்.
|
மருத்துவரானார்...
இந்நிலையில், தற்போது தனது மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராகி இருக்கிறார் சாய்பல்லவி. இத்தகவலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
|
விரைவில் தமிழ்...
இதனால், மலர் டீச்சர் இல்லையில்லை, டாக்டர் சாய்பல்லவி இனி படங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார், விரைவில் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.