twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலர் டீச்சர் இனி ‘டாக்டர்’!

    |

    சென்னை: பிரேமம் பட புகழ் நடிகை சாய் பல்லவி தற்போது தனது மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராகியுள்ளார்.

    பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழில் முன்னணி நாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்க, தமிழகத்தில் இருந்து போய் மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறவர் இவர்.

    பிரேமம் பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் சாய் பல்லவி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜார்ஜியாவில் மருத்துவம் படிக்க பறந்தார் சாய் பல்லவி.

    மணிரத்னம் படம்..

    மணிரத்னம் படம்..

    தனது படிப்பிற்கு இடையே மலையாளத்தில் களி படத்தில் நடித்தார் சாய் பல்லவி. பின்னர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது.

    கதையில் மாறுதல்...

    கதையில் மாறுதல்...

    ஆனால், கதையில் ஏற்பட்ட சில மாறுதல்களால் மணிரத்னம் படத்தில் இருந்து விலகினார் சாய் பல்லவி. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உரிய விளக்கமும் அவர் அளித்திருந்தார்.

    மருத்துவரானார்...

    இந்நிலையில், தற்போது தனது மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராகி இருக்கிறார் சாய்பல்லவி. இத்தகவலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    விரைவில் தமிழ்...

    இதனால், மலர் டீச்சர் இல்லையில்லை, டாக்டர் சாய்பல்லவி இனி படங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார், விரைவில் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Sai Pallavi is not just an actress any more. The 'Malar miss' of Premam, who stole the hearts of Malayalis through her debut film, has just graduated from her university in Georgia and is a doctor now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X