Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டிசம்பரில் 'அம்மா'வாகப் போகும் கரீனா கபூர்!
மும்பை: டிசம்பர் மாதம் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக பாலிவுட் நடிகர் சைப் அலிகான் தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட் நடிகர் சைப் அலிகான்- கரீனா கபூர் திருமணம் கடந்த 2012 ம் ஆண்டு நடந்தது. திருமணத்திற்குப் பின்னும் கரீனா தனது நடிப்பைத் தொடர்ந்து வருகிறார்.
திருமணமாகி 3 வருடங்கள் கடந்தும் கரீனா அம்மாவாகும் வாய்ப்பைத் தள்ளிப்போட்டுகொண்டே வந்தார். இதனால் கரீனா எப்போது குழந்தை பெற்றுக் கொள்வார்? என்ற கேள்வி அடிக்கடி அவரிடம் எழுப்பப்பட்டது.
ஆனால் கரீனா இது குறித்து எழுந்த கேள்விகளை தொடர்ந்து தவிர்த்து வந்தார். இந்நிலையில் நடிகர் சைப் அலிகான் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் ''டிசம்பர் மாதம் எங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறோம். எங்களை வாழ்த்திய நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இதுநாள்வரை பொறுமையாக இருந்த ஊடகங்களின் யூகம் மற்றும் பொறுமைகளுக்கும் நன்றி'' என்று கூறியிருக்கிறார். சைப் அலிகானுக்கு முதல் மனைவி மூலம் சாரா(23) என்ற மகளும், இப்ராஹிம் (15) என்ற மகனும் இருப்பது குறிப்பிடத்தகது.