என் கல்யாணம் பத்தி நானே சொல்றேன்... ஏன் அவசரப்படறீங்க!- சமந்தா
சென்னை: எனது திருமணம் எப்போது, யாருடன் என்பதையெல்லாம் நானே சொல்கிறேன். அவசரப்படாதீர்கள் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
முன்னணி நடிகையான சமந்தா பற்றி கடந்த சில தினங்களாக தொடர்ந்து சர்ச்சை செய்திகள் வலம் வருகின்றன.

வதந்திகள்
அவர் சினிமாவிலிருந்து விலகப் போவதாகவும், விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் சிலர் செய்தி வெளியிட்டிருந்தனர். ஒரு இளம் நாயகனைக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்று சமந்தாவே பேட்டி கொடுத்ததாக ஒரு நாளிதழ் தெரிவித்ததுதான் லேட்டஸ்ட்.

மறுப்பு
இந்த செய்திகளுக்கு ஒவ்வொரு முறையும் சமந்தா மறுப்பு தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. அவர் மறுப்பு தெரிவித்த அடுத்த நாள் வேறொரு வதந்தி கிளம்பும்.

நானே சொல்கிறேன்
இந்த திருமண வதந்திக்கும் சமந்தா ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், "நானாக சொல்லும் முன் என் திருமணம் குறித்துப் பேச வேண்டாம். நான் நான் நான் சமந்தாவாகிய நானே சொல்கிறேன். நன்றி," எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ட்வீட்...
சமந்தா வெளியிட்டுள்ள ட்வீட் இதுதான்:


Click it and Unblock the Notifications











