கணவரின் லவ் ஸ்டோரியை பார்த்து சமந்தா போட்ட கமெண்ட்...குழப்பத்தில் ரசிகர்கள்
ஐதராபாத் : சோஷியல் மீடியா பக்கங்களில் தனது டிஸ்பிளே பெயரை சமந்தா மாற்றியது முதலே அவர் தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய போகிறார். கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்ததால் தான் சமந்தா, தனது பெயரின் பின்னால் இருந்த அக்கினேனியை நீக்க விட்டார் என பல விதங்களில் செய்தி பரவியது.
பிறகு அவர்கள் பிரியவில்லை. அது அனைத்தும் வதந்தியே. இருவரும் இணைந்து கோவா மற்றும் மும்பையில் வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் மாமனார் நாகர்ஜுனா பிறந்தநாளுக்கு ட்விட்டரில் சமந்தா வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு நாகர்ஜுனா பதில் ஏதும் பதிவிடவில்லை. ஐதராபாத்தில் சமந்தா தனி வீட்டில் வசித்து வருவதாகவும், சமந்தா மற்றும் நாக சைதன்யாவை சேர்த்து வைக்க நாகர்ஜுனா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கடும் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

கோர்ட்டில் விவாகரத்து
இதற்கிடையில் சமந்தாவும், நாகசைதன்யாவும் பிரிய முடிவு செய்து விட்டதாகவும், விவாகரத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகளை கோர்ட்டில் துவங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் தான் சில மாதங்கள் பிரேக் எடுக்க போவதாக அறிவித்த சமந்தா, தற்போது மீண்டும் தெலுங்கு படங்களுக்கு ஓகே சொல்லி வருவதாகவும் பல விதங்களில் தகவல் பரவியது.

செம கெமிஸ்டரி
இந்நிலையில் நாக சைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். செப்டம்பர் 24 ம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தில் நாக சைதன்யா - சாய் பல்லவி இடையேயான கெமிஸ்டரி மிக கச்சிதமாக உள்ளதாகவும், மிக அழகாக இந்த டிரைலர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இது தான் கதையா
அம்மாவுடன் வசித்து வரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த டான்ஸ் மாஸ்டர் நாக சைதன்யா. வேலை தேடி அலையும் சாய் பல்லவி. இருவரிடையே ஏற்படும் நட்பு, பிறகு காதலாகிறது. எதிர்ப்புக்கள், தடைகளை தாண்டி இவர்கள் இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் லவ் ஸ்டோரி படத்தின் கதையாம்.
Recommended Video

குழப்பிய சமந்தாவின் பதிவு
ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டை பெற்ற இந்த டிரைலர் பற்றி சமந்தா என்ன சொல்வார் என சோஷியல் மீடியாக்களை கவனித்து வந்தனர் ரசிகர்கள். ஆனால் இந்த டிரைலர் வெளியிடப்பட்டு இரண்டு மணிநேரம் ஆகியும் சமந்தா எந்த கருத்தும் பதிவிடவில்லை. பிறகு, ஒரு வழியாக கருத்து பதிவிட்ட சமந்தா, வின்னர்... லவ் ஸ்டோரி படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். சாய் பல்லவிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு, நன்றி...சாம் என இரண்டே வார்த்தையில் நாகசைதன்யாவும் பதில் பதிவிட்டார்.

சந்தேகத்தை கிளப்பிய சமந்தா
கணவரின் படத்திற்கு சமந்தா வாழ்த்து கூறி விட்டதால் அவர்கள் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாம் சுமூகமாக தான் செல்கிறது என சிலர் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலர், அவர்கள் இருவருக்கிடையில் பிரச்சனை இல்லை என்றால் சமந்தா தனது பதிவில் ஏன் நாக சைதன்யாவின் பெயரை குறிப்பிடவில்லை. சாய் பல்லவியின் பெயரை மட்டும் குறிப்பிட்டு வாழ்த்து பதிவிட்டுள்ளாரே என சந்தேகத்தை கிளப்பினர். நாக சைனத்யாவும், இரண்டே வார்த்தையில் பதில் போட்டு விட்டாரே என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











