Don't Miss!
- News உத்தர பிரதேசத்தில் அமைச்சர் மீது ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
- Sports சூப்பர்! சிஎஸ்கேவின் மாஸ் திட்டம்.. ரூ.14 கோடி வீரருக்கு புதிய பொறுப்பு.. இனி அதிரடி தான்
- Finance எலான் மஸ்க் 'எனக்கு வேற வழி தெரியல ஆத்தா'..!! சீனா-வை அடக்க டெஸ்லா எடுத்த கடைசி ஆயுதம்..!
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கண்ணாடி கழட்டல.. சிரிப்பே இல்லை.. மும்பை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த சமந்தா!
மும்பை: நடிகை சமந்தா மும்பை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்து சென்ற போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் தீயாக பரவி வருகிறது.
நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.
உடல்நலம் குன்றிய நிலையிலும், ட்ரிப்ஸ் போட்டுக் கொண்டே யசோதா படத்திற்கு டப்பிங் பேசி அந்த படத்தை ரிலீஸ் செய்து 50 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை ஆடினார் சமந்தா.
காதல் காவியம் 'சாகுந்தலம்'..சமந்தா படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்!
மீண்டும் எழுந்து வந்த சமந்தா
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இதற்கு மேல் அவரால் எழுந்து நடக்கவே கஷ்டம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை ராஜநடை போட்டு சமந்தா நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
நான் இன்னும் சாகல
யசோதா படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அளித்த பேட்டியில் கண் கலங்கி பேசியிருந்தார். அப்போது, அவர் நான் இன்னும் சாகல லேசான உடல்நலக் குறைவு தான் மீண்டும் வருவேன் என தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திய சமந்தா சொன்னது போலவே மீண்டும் எழுந்து நடந்து வந்த காட்சிகள் சமந்தா ரசிகர்களை ஹாப்பி ஆக்கி உள்ளது.
ரசிகர்களுடன் செல்ஃபி
செல்ஃபி புள்ள சமந்தாவை எப்படி பார்த்தாலும் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் அல்லவா? அப்படி பெரிய கூலிங் கிளாஸ் அணிந்து அமைதியாக சமந்தா நடந்து சென்ற நிலையிலும், அவரை அடையாளம் கண்டு கொண்ட சில ரசிகர்கள் அருகே வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு சென்றனர்.
கண்ணாடியை கழட்டல
ஆனால், ரசிகர்களை பார்த்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்த நிலையிலும் நடிகை சமந்தா தனது பெரிய கண்ணாடியை கழட்டவில்லை. அதே நிலையில் தான் சில ரசிகர்களுடன் செல்ஃபி போட்டோக்கள் எடுத்துக் கொண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பெரிதாக சிரிக்கல
எப்போதுமே ரசிகர்களை பார்த்தால் செம ஹாப்பியாக சிரித்து அவர்களையும் சந்தோஷப்படுத்தும் நடிகை சமந்தா ரொம்பவே ரோபோ போல பெரிதாக சிரிக்காமல் வெறுமனே செல்ஃபிக்கு போஸ் கொடுத்து விட்டு அங்கே இருந்து கிளம்பிச் சென்ற காட்சிகள் மனதளவில் அவர் பெரிதாக உடைந்துள்ளார் என ரசிகர்களை கமெண்ட் போட வைத்துள்ளது.
பாலிவுட் படத்திற்காகவா
சமந்தா நடிப்பில் விரைவில் சகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. உடல் நலக் குறைவு காரணமாக ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் இருந்து சமந்தா விலகியதாக பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், மீண்டும் மும்பைக்கு சமந்தா பறந்து சென்றுள்ள நிலையில், மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்கப் போகிறாரா? சமந்தா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விரைவில் பழையபடி
கூடிய விரைவிலேயே நடிகை சமந்தா பழையபடி தனது இடத்தை பிடிப்பார் என்றும் உடல் நலம் நன்றாக தேறி உள்ள நிலையில் தான் மும்பைக்கு வேலை விஷயமாக இன்று காலை சமந்தா கிளம்பி சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் தற்போது சமந்தா கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அவசரத்துக்கு கேரவன்ல ஏறினேன்.. அந்த ஹீரோயினோட அம்மா விரட்டி விட்டாங்க.. நடிகை காயத்ரி ரேமா வேதனை!
-
கும்முன்னு இருக்கன்னு சொல்லி பிரபல இயக்குநர் பின்னாடி புடிச்சிட்டாரு.. பகீர் கிளப்பிய நடிகை காயத்ரி!
-
Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!