Don't Miss!
- Finance கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தமானது..? இதை உருவாக்கியது யார்..?
- News வாழைப்பழம்..ஊதுபத்தி..நெத்தியில் காசு.. சைக்கிள் ஓட்டி வந்த பிணம்..! திடுக்கிட்டு போன திண்டுக்கல்..!
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: ஏப்ரல் 24 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட மழை கொட்டும்..
- Automobiles வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
- Technology மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர்.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
பல் டாக்டரை கரம் பிடிக்கும் சரண்யா மோகன்: சினிமாவுக்கு முழுக்கு
பல் டாக்டரை திருமணம் செய்யப் போகிறார் நடிகை சரண்யா மோகன் மணக்க உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.
திருமணத்திற்குபின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறும் சரண்யா மோகன், நடனப்பள்ளியில் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.
சரண்யா மோகன்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை சரண்யா மோகன்.
வெண்ணிலா கபடிக்குழு
1997ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தவர். குமரியான பின்னர் தமிழில் 'யாரடி நீ மோகினி', 'வெண்ணிலா கபடிக் குழு', 'அழகர்சாமியின் குதிரை' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.
திருமணம்
சரண்யா மோகனுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டரான அரவிந்த் கிருஷ்ணன் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செப்டம்பர் 6ம் தேதி கொட்டக்குழங்கராவில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்தனர்.
நடிப்புக்கு முழுக்கு
இது பெற்றோர் நிச்சயித்த திருமணம் என்று சரண்யா மோகன் கூறியுள்ளார். ஆலப்புழாவில் நடனப் பள்ளி நடத்துகிறேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன். நடனப் பள்ளியிலும் பாடுவதிலும் கவனம் செலுத்துவேன்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு நன்றி
இதனிடைய சரண்யாவின் ஃபேஸ்புக் பக்கம் 50000 லைக்குகளைக் கடந்துள்ளது. இதற்கும் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் சரண்யா மோகன்.