கோச்சடையான்: தீபிகா சொந்தக் குரலில் பேசவில்லை... பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் குரல்!

தீபிகா படுகோன் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தாலும், அவர் ஒரு தென்னிந்தியப் பெண்தான். பெங்களூர்தான் பிறப்பிடம். அவருக்கு கன்னடம், இந்தியுடன் தமிழும் பேச வரும்.
ஆனால் அவ்வளவு சரளமாக இருக்காது. இதனால் தீபிகா படுகோனேவுக்கு கோச்சடையானில் டப்பிங் குரல் கொடுக்கபட்டு உள்ளது. தீபிகாவுக்கு குரல் கொடுத்திருப்பவர் பிரபல டப்பிங் கலைஞர் சவீதா ரெட்டி.
ஜெனிலியா தேஷ்முக், நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற ஹிந்தி திரைப்பட நடிகைகளுகு டப்பிங் கொடுத்தவர் சவிதா.இவர் முதன் முதலில் ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்தார். "
சவிதாவின் குரல் பற்றி வெகுவாக சிலாகிக்கும் சௌந்தர்யா கூறுகையில், "தீபிகாவிற்கு தமிழ் டப்பிங் செய்ய சவிதா சரியான தேர்வு. அவரது குரல் ரொம்ப ஸ்பெஷல். தீபிகாவின் பாத்திரத்துக்கேற்ற குரல் சவிதாவுக்குத்தான் இருக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











