Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை சாந்தி கிருஷ்ணா 2 வது விவாகரத்து!
சென்னை: பன்னீர் புஷ்பங்கள் புகழ் நடிகை சாந்தி கிருஷ்ணா மீண்டும் விவாகரத்து செய்துள்ளார்.
தமிழில் பாரதிவாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. இவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி. மலையாளத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் போன்ற படங்களிலும் நடித்தார்.
இவர் கடந்த 1984-ம் ஆண்டு மலையாள நடிகர் ஸ்ரீநாத் என்பவரை திருமணம் செய்தார். 11 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன்பின் 1998-ல் கொல்லத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபரான பஜோர் சதாசிவம் என்பவரை சாந்தி கிருஷ்ணா 2-வது திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையேயும் சண்டை ஏற்பட்டு 2-வது கணவரையும் சாந்தி கிருஷ்ணா பிரிந்தார்.
இருவரும் கர்நாடகாவில் வசித்து வந்ததால் அங்குள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்தனர். நேற்று அவர்களுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளதாக சாந்தி கிருஷ்ணா அறிவித்துள்ளார்.