Don't Miss!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்ன பெரிய வயசு...: ஸ்ரேயாவின் மெகா திட்டம்
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரேயா தனது எதிர்கால திட்டம் குறித்து தெளிவாக உள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் ஒரு ரவுண்டு வந்தவர் ஸ்ரேயா சரண். தற்போது அவரது மார்க்கெட் டல்லடித்துள்ளது. இருப்பினும் தன்னை தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
2018ம் ஆண்டு அவருக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சினிமா குறித்து ஸ்ரேயா கூறியதாவது,
மகிழ்ச்சி
தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் நடிப்பீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். ஹாலிவிட்டில் நடிகை மெரில் 60 வயதை தாண்டியும் நடிக்கிறார். அவரை போன்று நானும் தொடர்ந்து நடிப்பேன்.
காயத்ரி
தமிழில் காயத்ரி, தெலுங்கில் வீர போக வசந்த ராயலு, காயத்ரி, இந்தியில் தட்கா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு கதக் நடன கலைஞர் ஆவேன்.
நேரம்
சினிமா படங்களில் பிசியாக இருந்ததால் பல ஆண்டுகளாக நடன பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனது. தற்போது மீண்டும் நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
ஆர்வம்
இளம் தலைமுறையினர் நம் பாரம்பரிய நடனங்களான பரதம், குச்சுபுடி, கதக் உள்ளிட்டவற்றை கற்க வேண்டும். அவர்களுக்கு அந்த ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன் என்றார் ஸ்ரேயா.