4 படமானாலும், 'நச்சு'ன்னு இருக்கணும்: சினேகா

By Siva

Sneha
நாலு படங்களில் நடித்தாலும் அது ரசிகர்கள் மனதில் 'நச்'சுன்னு இடம் பிடிக்கும் அளவில் இருக்க வேண்டும் என்று நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.

குடும்பப் பாங்கான பட நாயகி என்றதும் நம் நினைவுக்கு வரும் முதல் நடிகை புன்னகைச் செல்வி சினேகா. சினேகா பட்டுச்சேலை உடுத்தி, தலை நிறைய மல்லிக்கைப்பூ வைத்து, சிரித்தவாறு போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களை பல கடைகளில் பார்க்கலாம்.

என்னடா சினேகாவை கொஞ்ச நாளாக படங்களில் அதுவும் அடிக்கடி பார்க்க முடியவில்லை என்று அவரிடமே கேட்டதற்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் ஒரு புன்னகைப் பூவை உதிர்த்துவிட்டு பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது,

நான்கு படம் என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் நடிக்கத் தான் ஆசைப்படுகிறேன். பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு ஆகிய படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் போன்று மீண்டும் நடிக்க வேண்டும். அது மாதிரியான ரோல்களுக்காகத் தான் காத்திருக்கிறேன்.

அதனால் தான் வரும் படத்தை எல்லாம் ஒப்புக் கொள்வதில்லை என்றார்.

தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் ராஜன்னா, தமிழில் சரத்குமாருடன் விடியல், சுந்தர். சி.யுடன் முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை தனக்கு நிச்சயம் நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.

தெளிவான பொண்ணுதானுங்க சினேகா...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X