Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கவர்ச்சியை திணிக்கிறார்கள்: ஸ்ரீதேவி
தேவதையைக் கொண்டேன் படத்தின் வெற்றியையடுத்து கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவர் நடித்து ஓடிய மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த சந்தோஷம்.
இந் நிலையில் ஈரோட்டில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்ற ஸ்ரீதேவி பேசுகையில்,
பெரும்பான்மையான படங்களில் கதைக்குத் தேவைப்படி கவர்ச்சி காட்டப்படுகிறது. ஆனால் சில படங்களில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சியை திணித்து விடுகிறார்கள்.
தயாரிப்பாளரின் விருப்பத்திற்கு இணங்க இது நடப்பதால் அதை தவிர்க்க
முடியவில்லை.
தற்போது வெளிவரும் படங்களில் கவர்ச்சி அதிகமாக இருப்பதாக கூறமுடியாது.
கதைக்கு தேவைப்படும் அளவுக்கு நானும் எக்ஸ்போஸ் செய்து நடிக்கத் தயார் தான்.
மும்பை நடிகைகளைப் போல தமிழ் நடிகைகளால் புகழ் பெறமுடியவில்லை என்பதை ஏற்க முடியாது. அவர்களைப் போலவே நம்மவர்களுக்கும் திறமை இருக்கத்தான் செய்கிறது.
தமிழ் படத்திற்கு ஆங்கிலப் பெயர் வைக்கக்கூடாது என்று சில அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல. இதனால் பாதிப்பு சினிமாவுக்குத் தான்.
கதைக்கு ஏற்றபடி ஆங்கிலப் பெயர் வைப்பதில் தவறே இல்லை. இது என் தனிப்பட்ட கருத்து தான்.
தேவதையைக் கண்டேன் படத்தில் கடைசி காட்சியில் நான் ரசிகர்கள் வெறுக்கும்படி நடித்ததாக கூறுகிறார்கள். எந்த ஒரு கேரக்டர் என்றாலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கத் தான் நான் அவ்வாறு நடித்தேன் என்றார் ஸ்ரீதேவி.