டப்பிங் பேசணும்… தேசிய விருது வாங்கணும்... ரூட்டு மாறும் ஸ்ரீதிவ்யா!
கீர்த்தி சுரேஷ் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது ஊதா கலர் ரிப்பன் ஸ்ரீதிவ்யாதான். நன்றாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கையில் மாவீரன் கிட்டு தவிர வேறு படங்கள் இல்லை. காஷ்மோராவிலும் ஸ்ரீதிவ்யாவுக்கு துக்குனூண்டு ரோல் கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள்.
எனவே இனி நடிக்கத் தெரிந்த நடிகையாக பெயர் வாங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.

'இப்ப இருக்கற ஹீரோயின்கள்ல நான் நல்லா தமிழ் பேசறேன். படங்கள்லயும் டப்பிங் பேச விருப்பப்படறேன். சொந்தக்குரல்ல பேசினாத் தான் தேசிய விருதாவது வாங்க முடியுமாமே?' என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறார்.
சொன்னதோடு தேசிய விருது வாங்கித் தரக்கூடிய ரோலாக தேடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











