Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காலில் பட்ட அடியுடன் “அச்சமின்றி” படத்தில் நடித்துக் கொடுத்த சிருஷ்டி டாங்கே
சென்னை: கோலிவுட்டில் புதிதாக தயாராகி வருகின்ற அச்சமின்றி என்ற படத்தின் சண்டை காட்சியில் அடிபட்ட காலுடன் வலியை தாங்கிக்கொண்டு நடித்துள்ளார் நடிகை சிருஷ்டி டாங்கே.
"என்னமோ நடக்குது" படத்தை அடுத்து வி.வினோத்குமார் தயாரிக்கும் புதிய படத்துக்கு "அச்சமின்றி" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
விஜய் வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். ராஜபாண்டி படத்தினை இயக்கி வருகின்றார்.
பிரமாண்ட அரங்குகள்:
அச்சமின்றி படத்துக்காக சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்கிறது.
மூன்று வில்லன்களாம்:
பரத்ரெட்டி, சேரன்ராஜ், ஜெயகுமார் ஆகிய மூன்று வில்லன்களிடம் இருந்தும் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே ஆகிய இருவரும் தப்பிப்பது போன்ற காட்சி படமானது.
சிருஷ்டிக்கு காலில் பலத்த அடி:
சண்டை காட்சியின்போது, சிருஷ்டி டாங்கே காலில் பலத்த அடிபட்டது. வலியை தாங்கிக்கொண்டு அவர் தொடர்ந்து அந்த காட்சியில் நடித்து முடித்தார்.
சமுத்திரக் கனிக்கு முக்கிய வேடம்:
வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரக்கனி நடிக்கிறார். மேலும், கருணாஸ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, கும்கி அஸ்வின் ஆகியோரும் நடிக்கிறார்கள்.