ஒர்க்அவுட் பண்றேன்: இடுப்பை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிரபல நடிகை
மும்பை: நடிகை சுஷ்மிதா சென் தனது இடுப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மிதா சென். அழகிப் பட்டம் வென்ற பிறகு நடிகையானார் சுஷ்மிதா.
பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். கோலிவுட் பக்கமும் வந்து சென்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம்
ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்து சிக்கென்று வைத்துள்ள இடுப்பை புகைப்படம் எடுத்து இன்ஸ்டிகிராமில் வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா சென்.

ரசிகர்கள்
சுஷ்மிதா சென்னின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஒரு முன் உதாரணம் மேடம். அழகு மேடம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர். சிலர் வக்கிரமான கமெண்ட்டுகள் போட்டுள்ளனர்.

தாய்
திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் சுஷ்மிதா சென் ரினி, அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதில் ரினி கடந்த செப்டம்பர் மாதம் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடினார்.

படிப்பு
ரினிக்கு படங்களில் நடிக்கும் ஆசை உள்ளது. முதலில் படிப்பு அதன் பிறகே நடிப்பு என்று கறாராக மகளிடம் சொல்லிவிட்டார் சுஷ்மிதா. அதனால் ரினி தற்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











