Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுஷ்மிதாவுக்கு ரூ.25 லட்சம் ஃபைன்!
வெளிநாட்டுக் காருக்கான வரியைக் கட்டாததால் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென் வெளிநாட்டிலிருந்து டயோட்டா லேட் குருய்சர் காரை வாங்கினார். ஆனால் காரை தனது பெயரில் நேரடியாக வாங்காமல், இன்னொருவர் பெயரில் வாங்கி பின்னர் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.வெளிநாட்டுக் காரை வாங்கினால், மும்பை மாநகராட்சிக்கு நுழைவு வரி கட்ட வேண்டும். ஆனால் அதைக் கட்டாமல் டபாய்த்து விட்டார் சுஷ்மிதா. இதையடுத்து மும்பை மாநகராட்சி சுஷ்மிதாவுக்கு அபராதம் போட்டது.
ஆனால் கட்ட மறுத்த சுஷ்மிதா, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வரி கட்டும்படி உத்தரவிட்டது. இதற்கு கால அவகாசமும் கொடுத்தது.
ஆனால் குறித்த காலத்திற்குள் வரியைக் கட்டத் தவறினார் சுஷ்மிதா. இதையடுத்து அவருக்கு ரூ. 25 லட்சம் அபராதத்தை உயர்நீதிமன்றம் விதித்தது. அதில், ரூ. 10 லட்சத்தை ஜாமீன் தொகையாக கட்ட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஜாமீன் தொகையை தனது வரி பாக்கிக்காக எடுத்துக் கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி கேட்க இப்போது மாநகராட்சி முடிவு செய்துள்ளது.