மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்வேதா பாசு.. இந்திப் படத்தில் குத்தாட்டம்!
விபச்சார வழக்கில் சிக்கி, பின்னர் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு, மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சிறையிலிருந்து வந்த பிறகு அவர் முதல் முறையாக ஒரு இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
இந்தப் பாடலில் அதிகபட்ச கவர்ச்சி காட்டவும் சம்மதித்துள்ளாராம் ஸ்வேதா. இந்தப் பாடலுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கியுள்ளார்.

இது தவிர ஒரு இந்திப் படத்தில் நாயகியாக நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாம்.
தெலுங்கில் சில வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை இப்போதைக்கு ஒப்புக் கொள்ளாத ஸ்வேதாபாசு, இந்தி வாய்ப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். மேலும் தனது நண்பர் நடத்தும் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பை கவனித்து வருகிறார்.
தமிழில் ஏற்கெனவே ராரா, சந்தமாமா ஆகிய படங்களில் ஸ்வேதா பாசு நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











