ஹீரோயின்
விபச்சாரத்தில் ஈடுபட்ட இன்னொரு டிவி நடிகை பிடிபட்டிருக்கிறார்.
மாதுரியில் ஆரம்பித்து புவனேஸ்வரி, சிந்து என விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சினிமா, டிவி நடிகைகள்தொடர்ந்து பிடிபட்டு வருகின்றனர்.
இப்போது இந்த வரிசையில் ஸ்வேதா என்ற ஆயிஷா பிடிபட்டுள்ளார். இவர் கங்கா காயத்ரி, ராஜ் டிவியில்ஒளிபரப்பாகி வரும்உறவு சொல்ல ஒருவன் ஆகிய டிவி தொடர்களில் நடித்து வருகிறார். சாலிக்கிராமத்தில் காந்திநகரில் இவரது வீடு உள்ளது..
இந்த வீட்டில் வைத்தே இவர் விபச்சாரம் செய்து வந்துள்ளார். இவரது வீட்டில் இருந்த இன்னொரு பெண்ணானஸ்ரீஷாமேரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இரு புரோக்கர்கள் உதவியுடன் செல்போன் மூலம் கஸ்டமர்கள்இவரைத் தொடர்பு கொண்டு வந்துள்ளனர்.
இதை அறிந்த போலீசார் காதலர் தினத்தையொட்டி ஜாலியாக இருக்கலாம் என்று கஸ்டமர்கள் மாதிரி பேசினர்.உடனே அவர்களை வடபழனியில் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு வரச் சொன்னார் ஸ்வேதா.
அங்கு சென்ற போலீசாரிடம் ஸ்வேதாவும் ஸ்ரீஷாமேரியும் ரூ. 5,000 கேட்டனர். இதையடுத்து அந்த இருவரையும்போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதில் ஸ்ரீஷாமேரி பெங்களூரைச் சேர்ந்தவர். மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











