Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தலைகீழ் - ஒரு பயானுபவம்!
தலைகீழ் படத்தின் குழுவினர் அந்தப் படத்தை எடுத்ததை விட சந்தித்த அனுபவங்கள் படு திகிலாக உள்ளன.
ரெக்ஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தலைகீழ். சமீபத்தில்தான் படப்பிடிப்பு முடிந்தது. சமீபத்தில் பாடல் வெளியீடு நடந்தது. அப்போது படப்பிடிப்பின்போது சந்தித்த திகிலான அனுபவங்களை ரெக்ஸ் ராஜ் பகிர்ந்து கொண்டார். அவர் கூறக் கூற படத்தை விட அது படு திகிலாக இருந்தது.
முதலில் நாயகி தேஜாமயிக்கு ஏற்பட்ட அனுபவம். படப்பிடிப்பில் ஆட்டோ துரத்தல் காட்சி ஒன்றில் நடித்தபோது அவர் மயங்கி விழுந்து விட்டாராம். பின்னர் வனப்பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது பெரிய நாகப் பாம்பு படம் எடுத்து ஆடி அனைவரையும் அலற வைத்துள்ளது.
நாகப் பாம்பைப் பார்த்து படப்பிடிப்புக் குழுவினர் பயந்து ஓடியுள்ளனர். இந்த துயரத்திலிருந்து மீண்டு அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது, 60 அடி பள்ளத்தில் உதவி இயக்குநர் ஒருவர் விழுந்து விட்டாராம். ஹீரோவுக்கு காட்சியை விளக்கிக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் விழுந்துள்ளார் அவர்.
வனப்பகுதியில் வசித்து வரும் கிராமத்தினர் தக்க சமயத்தில் அவரை காப்பாற்றி மீட்டனராம்.
அதேபோல வில்லன் துரத்தும் காட்சியில் 2வது நாயகி நிவேதிதா தவறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டாராம்.
இப்படி பல சிக்கல்களைத் தாண்டி ஒரு வழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனராம்.
திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரெக்ஸ் ராஜ் இவற்றை வர்ணித்தபோது அரங்கமே அதை திகிலுடன் கேட்டது.
படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஆதிஷ் என்ற புதுமுகம். இவருக்கும், இசையமைப்பாளர் தேவாவுக்கும் நல்ல நட்பு உள்ளதாம். அந்த நட்பின் காரணமாக தேவாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தேவாவுடன் சில காலம் இணைந்து பணியாற்றியுள்ளாராம் ஆதிஷ்.