"தேங்க்ஸ் வேதாளம்".. நன்றி சொன்ன ஸ்ருதி ஹாசன்!
சென்னை: வேதாளம் படத்தில் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது இந்த சந்தோஷத்தை அளித்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றிகள் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக சென்னை, கொல்கத்தா இத்தாலி ஆகிய இடங்களில் நடந்து வந்த வேதாளம் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இதனையொட்டி நடிகை ஸ்ருதிஹாசன் "வேதாளம் படக்குழுவினருடன் பணிபுரிந்தது மிகவும் ஜாலியாகவும் நல்ல அனுபவமாகவும் இருந்ததது. குறிப்பாக எனது சூப்பரான இயக்குநர் சிவாவுக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.
வேதாளத்தில் அஜீத்துடன் இணைந்து ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், சூரி மற்றும் வித்யுலேகா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











