Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமிக்ஷா, தாரிகாவின் தவிப்பு!
கலை நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற விமானத்தை தவற விட்டு விட்டு தாரிகாவும், சமிக்ஷாவும் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பரிதவித்து பரிதாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கலை நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற விமானத்தை தவற விட்டு விட்டு தாரிகாவும், சமிக்ஷாவும் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பரிதவித்து பரிதாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த கலை விழா நடைபெற்றது.
இதில் நடிகர் பரத், நடிகைகள் சந்தியா, உயிர் சங்கீதா, சமிக்ஷா, தாரிகா, மும்தாஜ், கனிகா, பாடகி அனுராதா ஸ்ரீராம், பாடகர் கார்த்திக், நடன இயக்குனர் கந்தாஸ் உள்பட 40 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு தொடங்கியது. 18,000 ரசிகர்கள் திரண்டு வந்து தங்களது இஷ்ட தேவதைகளையும், அவர்கள் வழங்கிய நிகழ்ச்சிகளையும் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.
நிகழ்ச்சி முடிந்து சனிக்கிழமை தாரிகா, சங்கீதா, சமிக்ஷா, கனிகா, பாடகர், பாடகிகள் துபாயிலிருந்து சென்னைக்கு கிளம்பினர். விமான நிலையத்துக்கு வந்த அவர்கள் பாஸ்போர்ட் சோதனை மற்றும் உடமைகள் சோதனைகள் முடிந்து அனைவரும் விமானத்தில் ஏறத் தயாராக இருந்தனர்.
விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாகவே அனைவரும் விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். இந்த சமயத்தில் தாரிகாவும், சமிக்ஷாவும் டைம் இருக்கிறதே, அதற்குள் ஷாப்பிங் போய் விட்டு வந்து விடலாம் என கடைக்குக் கிளம்பினர்.
பெண்கள் ஷாப்பிங்குக்குத்தான் நேரம் காலம் கிடையாதே, பொருட்களை பார்த்த பேருவகையில் நேரம் போவது தெரியாமல் இருவரும் கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த களேபரத்தில் விமான நேரத்தை மறந்து இருவரும் நெடு நேரம் ஷாப்பிங் செய்தனர். இதனால் இருவரும் விமானத்தை தவறவிட்டனர்.
ஷாப்பிங் முடிந்து திரும்பி வந்த சமிக்ஷாவும், தாரிகாவும் விமானம் புறப்பட்டுவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரும் சுமார் 12 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்து, மறுநாள் கிளம்பிய விமானத்தில் சென்னை வந்தடைந்தனர்.
இந்த குழப்பம் குறித்து சமிக்ஷா கூறுகையில், விமானம் புறுப்படுவதற்கு நேரம் இருந்ததால் நானும், தாரிகாவும் ஷாப்பிங் போனோம். திரும்பி வந்து பார்த்தால் விமானம் கிளம்பிப் போய் விட்டது.
அதிர்ச்சி அடைந்த நாங்கள் அடுத்த விமானத்தில் புறப்பட்டு விடலாம் என்று எண்ணி விமான நிலையத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தோம். ஆனால் நேரம் ஆக ஆக பயமாகி விட்டது. நடந்து, நடந்து எங்களது கால்கள் மறத்துப் போய் விட்டன.
கிட்டத்தட்ட 12 மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டியதாகி விட்டது. அடுத்த நாள் காலையில்தான் விமானம் கிடைத்து, ஊரைப் பார்க்க வந்து சேர்ந்தோம். அய்யோ கடவுளே இந்த அனுபவத்தை மறக்கவே முடியாதுப்பா என்று கிலி விலகாத நிலையில் சொல்லி முடித்தார்.
பொண்ணுங்க கடைக்குப் போனா இப்படித்தான் நடக்கும் என்பதற்கு சமிக்ஷா, தாரிகா சரியான உதாரணம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?