Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"முஸ்தபா முஸ்தபா".. கண்களால் கைது செய்த காதலரை வருஷக் கடைசியில் கரம் பிடிக்கிறார் முத்தழகு!
சென்னை: இந்தாண்டு இறுதியில் தனது காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாராம் நடிகை பிரியாமணி.
பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியாமணி. கார்த்தி ஜோடியாக இவர் நடித்த பருத்தி வீரன் படம் பிரியாமணிக்கு திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.
இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருது கிடைத்தது.
தமிழில் வாய்ப்பில்லை...
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களிலும் பிரியாமணி நடித்துள்ளார். தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், கன்னடத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
காதல்...
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா என்பவரை பிரியாமணி காதலித்து வருவதாக தகவல் பரவியது. இருவரும் ஜோடியாக விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.
விரைவில் திருமணம்...
இந்த சூழ்நிலையில், தற்போது தனது காதல் விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளார் பிரியாமணி. இந்தாண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
நடன நிகழ்ச்சியில் அறிமுகம்..
இது குறித்து வார இதழ் ஒன்றிற்கு பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், "நானும் முஸ்தபாவும் காதலிக்கிறோம். இருவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தோம்.
நட்பு காதலானது...
ஆரம்பத்தில் நட்பாக பழகினோம். பிறகு காதல் வயப்பட்டோம். நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். இந்த வருடம் இறுதியில் எங்கள் திருமணம் நடக்கும்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்...
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.