Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எக்ஸ்க்யூஸ்மி மீம்ஸ் கிரியேட்டர்ஸ்: ஸ்ருதியிடம் உங்க பப்பு வேகலை
மும்பை: சமூக வலைதளங்களில் தன்னை யார் கிண்டல் செய்தாலும் தனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன்.
ஸ்ருதி ஹாஸன் நடித்த பெஹன் ஹோகி தேரி இந்தி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்ப்பவர்கள் படம் நன்றாக உள்ளதாகவும், ஸ்ருதியின் நடிப்பு அருமை என்றும் பாராட்டி வருகிறார்கள்.
பெஹன் ஹோகி தேரி படத்தால் ஸ்ருதி மகிழ்ச்சியில் உள்ளார்.
மீம்ஸ்
ஸ்ருதி ஹாஸன் என்றாலே மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகிவிடுகிறார்கள். ஸ்ருதியின் லுக், அவரின் குரலை கிண்டல் செய்து மீம்ஸ் போடுகிறார்கள். மேலும் சிலர் ஸ்ருதியை கலாய்த்து ட்வீட் போடுகிறார்கள்.
ஸ்ருதி
சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்வது பற்றி ஸ்ருதி பேசியுள்ளார். யார் கிண்டல் செய்வதாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. இது சமூக வலைதளம் மட்டும் இல்லை இது தான் மக்களின் வாழ்க்கை, எண்ணத்தை பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன் என்கிறார் ஸ்ருதி.
சமூக வலைதளம்
அடுத்தவர்களை பற்றி ஏதாவது முடிவுக்கு வருவது அல்லது கிண்டல் செய்வது அல்லது தாக்கிப் பேசுவது சரி என்று மக்கள் நினைக்கிறார்கள். நேரில் செய்ய முடியாததை செய்ய சமூக வலைதளம் தைரியம் அளிக்கிறது என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
அடுத்தவர்களின் கருத்துகள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. அதனால் சமூக வலைதளங்களில் கலாய்ப்பது என்னை பாதிக்கவில்லை. அடுத்தவர்கள் சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொண்டால் யாரும் நம் வேலையையும் செய்ய முடியாது, வீட்டை விட்டு வெளியே வரவும் முடியாது என்று ஸ்ருதி கூறியுள்ளார்.