Just In
- 20 min ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 25 min ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 1 hr ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 1 hr ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
மதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வரலெட்சுமி நடிக்கும் 'காட்டு'... அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸ்!
சென்னை : நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு இந்த வருடம் படங்கள் வரிசைகட்டிக் கொண்டு வெளியாகின்றன. இன்னும் பல படங்கள் வெளியாக இருக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் வரலட்சுமி நடித்த 'விக்ரம் வேதா', 'நிபுணன்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. சிபிராஜுடன் இணைந்து நடித்துள்ள 'சத்யா' படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மலையாளத்தில் வரலட்சுமி நடித்துள்ள 'காட்டு' (காற்று) படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கடந்த வருடம் 'கசபா' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகிலும் கால் பதித்தார் வரலட்சுமி.
சில வருடங்களாக நல்ல வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்த வரலட்சுமிக்கு மலையாளத்தில் அடித்திருக்கிறது அதிர்ஷ்டம். தற்போது மம்முட்டியுடன் மீண்டும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அதற்கு முன்பே அவர் நடித்த 'காட்டு' படம்தான் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.
இந்தப்படத்தை அருண்குமார் அரவிந்த் என்பவர் இயக்குகிறார். நடிகரும் காதாசிரியருமான முரளிகோபி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்தப்படத்தில் முத்துலட்சுமி என்கிற தைரியமான தமிழ்ப்பெண் கேரக்டரில் நடித்திருக்கிறாராம் வரலட்சுமி.