Don't Miss!
- News ஆஹா.. திடீரென குறைந்த தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா? ஆனந்த் சீனிவாசன் பளிச்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
துபாய் தொழிலதிபரை மணந்த நடிகை வீணா மாலிக்
மும்பை: பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நடிகை வீணா மாலிக் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சேனல் ஒன்றின் 'பிக்பாஸ்' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.
இதன்மூலம் இந்தியாவில் பிரபலம் ஆனார் வீணா மாலிக். இந்த நிலையில் வீணா மாலிக் துபாயைச் சேர்ந்த ஆசாத்பஷிர்கான் காத்தக் என்பவரை திடீர் திருமணம் செய்தார். தொழில் அதிபரான ஆசாத்பஷீர்கான் துபாயிலும் அமெரிக்காவிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
(நடிகை வீணா மாலிக், ஆசாத்பஷிர்கான் காத்தக்)
கவர்ச்சி நடிகை
டாப்லெஸ் போஸ் கொடுத்தும், கவர்ச்சி வேடங்களில் நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாலிவுட் நடிகை வீனா மாலிக். சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து கன்னடத்தில் உருவான சில்க் சக்கத் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்தார். இது சர்ச்சைக்குள்ளானது. இப்பிரச்னை முடிவதற்குள் படுகவர்ச்சி வேடத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
எடுபடாத கவர்ச்சி
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதும் இவரது சினிமா மார்க்கெட் உயரவில்லை. இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். மல்லிகா ஷெராவத் டி.வி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று காதலனை தேர்வு செய்தது போல் வீணாவும் அதே பாணியில் காதலனை தேர்வு செய்ய எண்ணினார். ஆனால் அவர் பங்கேற்க விருப்பம் தெரிவித்த ரியாலிட்டி ஷோ ரத்தானது.
துபாய் தொழிலதிபர்
இந்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி துபாயைச் சேர்ந்த ஆசாத்பஷிர்கான் காத்தக் என்பவரை திடீர் திருமணம் செய்தார். இவர் வீணாமாலிக்கின் தந்தையின் நண்பரின் மகன் ஆவார். தொழில் அதிபரான ஆசாத்பஷீர்கான் துபாயிலும் அமெரிக்காவிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
மகிழ்ச்சியான பெண்
திருமணம் பற்றி வீணா மாலிக் கூறுகையில், இது பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண் நானாகத்தான் இருப்பேன். இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள். மற்ற விவரங்களை பின்னர் தெரிவிக்கிறேன்'' என்று டுவிட்டரில் கூறியுள்ளார்
மூன்று நாடுகளில்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை துபாய், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வீணா மாலிக் தெரிவித்தார்.
71000 பேர் விருப்பம்
தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவான ஸ்வயம்வர் நிகழ்ச்சியில் வீணா மாலிக் பங்கேற்ற போது அவரை 71 ஆயிரம் பேர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.