பஞ்சாபி படத்தில் வீணாவின் குத்துப் பாட்டு!!
பஞ்சாபி மொழியில் முதல் முறையாக நடிக்கும் வீணா மாலிக் அங்கு ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளாராம்.
பாகிஸ்தானிலிருந்து பாலிவுட்டுக்கு வந்தவர் வீணா மாலிக். இங்கு அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பஞ்சாபி மொழிப் படம் ஒன்றிலும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் வீணா.
ஜாட்ஸ் கோல்மால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக அவர் குத்துப் பாட்டு ஒன்றுக்கு ஆடிய காட்சியை சமீபத்தில் படமாக்கினார்களாம்.

அடுத்தடுத்து 6 படம்
இந்த ஆண்டு வீணா மாலிக்குக்கு நல்ல ஆண்டு என்றே சொல்ல வேண்டும். காரணம் அவர் மொத்தம் ஆறு பாலிவுட் படங்களில் புக் ஆனதால். அதில் முக்கியமான படமாக அவர் எதிர்பார்ப்பது தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்.

பஞ்சாபியில் குத்துப் பாட்டு
தற்போது பஞ்சாபி மொழியில் ஜாட்ஸ் கோல்மால் என்ற படத்தில் நடிக்கும் வீணா மாலிக் அதில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். ஷிட்ஜி செளத்ரி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா பாபர்தான் ஹீரோ.

கவர்ச்சியான சேலை, ரவிக்கையில்
இப்பாடலுக்காக வீணா மாலிக் கவர்ச்சிகரமான காஸ்ட்யூமில் ஆடிப் பாடிய காட்சியை ஷூட் செய்துள்ளனர்.

செம காமெடி
குத்துப் பாட்டுக்கு ஆடியது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இப்போதுதான் பஞ்சாபி குத்துப் பாட்டுக்கு முதல் முறையாகஆடியுள்ளேன். நல்ல வேடிக்கையாக இருந்தது. இப்படி ஒரு பாட்டுக்கு இதுவரை நான் ஆடியதே இல்லை.
இந்தக் குத்துப்பாட்டை சுனிதி செளஹான் பாடியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











