Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ராசியில்லா ரோஜா!!
பொய் படம் மூலம், ஆஸ்திரேலியாவிலிருந்து கோலிவுட்டுக்குப் பறந்து வந்த நெடும் தேவதை விமலா ராமன். ஆனால் அவருக்கு கோலிவுட்டில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படவில்லை, மாறாக ரெட் போட்டு விட்டது கோலிவுட்.
பொய் படத்திற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியவில்லை. விமலா ராமனின் வெளிப்படையான பேச்சும், புத்திசாலித்தனமும் கோலிவுட்டார்களுக்குப் பிடிக்கவில்லையோ அல்லது புரிபடவில்லையோ என்னவோ, கோலிவுட்டில் விமலாவால் தேற முடியாமல் போய் விட்டது.
இதனால் மலையாளப் பக்கம் பார்வையைத் திருப்பினார் விமலா. தமிழால் கைவிடப்பட்ட விமலாவுக்கு, மலையாளம் வரவேற்பைக் கொடுத்தது.
சுரேஷ்கோபி, மோகன்லால் என முன்னணி ஸ்டார்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இங்கும் சோதனை குறுக்கிட்டது. அவர் மலையாளத்தில் நடித்த நான்கு படங்களுமே தோல்வியைத் தழுவி விட்டன. இதனால் ராசியில்லாத நடிகையாக மாறிப் போய் விட்டார் விமலா.
இந்த ஆண்டு அவர் மலையாளத்தில் சுரேஷ் கோபியுடன் டைம், பின்னர் பிரணயகாலம், சூரியன் என மூன்று படங்களில் நடித்தார். மூன்றுமே தோல்விப்படங்கள். சமீபத்தில் மம்முட்டியுடன் நடித்த நஸ்ரனி படமும் ரிலீஸானது. ஆனால் இதுவும் போன வேகத்திலேயே பொட்டிக்குத் திரும்பி விட்டதாம்.
தொடர்ந்து ஹர்ட் படங்களையே கொடுத்து வருவதால் விமலா ரொம்பவே நொந்து போயுள்ளாராம். தற்போது அவரது கைவசம் கல்கத்தா நியூஸ், காலேஜ் குமரன் என இரு படங்கள் மட்டுமே மலையாளத்தில் இருக்கிறதாம். இதுவும் தோல்வியடைந்தால் மறுபடியும் சென்னைக்கு வந்து தமிழில் அதிர்ஷ்டத்தைப் பரீட்சிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.