நடிகை ஷ்ரத்தா கபூரின் இதயமே ஒருநிமிடம் நின்றுவிட்டதாம்: எதற்கு தெரியுமா?
மும்பை: யாருக்கோ அனுப்ப நினைத்த எஸ்.எம்.எஸ்.ஸை தவறாக வேறு ஒருவருக்கு அனுப்பிய போது நடிகை ஷ்ரத்தா கபூரின் இதயத்துடிப்பே சிறிதுநேரம் நின்றுவிட்டதாம்.
பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகள் ஷ்ரத்தா கபூர் இயக்குனர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஷ்ரத்தாவுக்கு நடிக்கத் தெரியும் என்று எங்களுக்கு தெரியும் ஆனால் அவர் இவ்வளவு நன்றாக டான்ஸ் ஆடுவார் என்பது ஏபிசிடி2 படம் மூலம் தான் தெரியும் என்று பாலிவுட்டில் கூறுகிறார்கள்.
இந்நிலையில் ஷ்ரத்தா தனது குடும்பம், நடிப்பு பற்றி கூறுகையில்,

சக்தி கபூர்
அப்பா சக்தி கபூர் நடிகராக இருப்பது பெருமையான விஷயம். அவரது பார்த்து தான் எனக்கும் இந்த துறைக்கு வர வேண்டும் என்ற ஆசை வந்தது.

அம்மா
என் அம்மா சமையல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அவ்வளவு சுவையாக சமைப்பார். நானும் என் அண்ணனும் நல்ல நண்பர்கள். அனைத்தையும் மனம் விட்டு பேசுவோம்.

ரித்திக் ரோஷன்
என்னுடைய முதல் க்ரஷ் என்றால் அது நடிகர் ரித்திக் ரோஷன் தான். அவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்.

எஸ்.எம்.எஸ்.
ஒரு முறை நான் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப நினைத்து அதை தவறுதலாக வேறு ஒருவருக்கு அனுப்பிவிட்டேன். அப்போது சில நிமிடம் என் இதயத்துடிப்பே நின்றுவிட்டது என்றார் ஷ்ரத்தா.


Click it and Unblock the Notifications











