Don't Miss!
- News
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
- Sports
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்.. ரசிகர்களுக்கு பிசிசிஐ தந்த மெகா சர்ஃப்ரைஸ்.. வரலாற்று தொடராக மாறுகிறது
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்த 15 நாட்களுக்கு எந்த ரிசார்ட்டோ?: நடிகை ஸ்ரீப்ரியா
சென்னை: அடுத்த 15 நாட்களுக்கு ஹாலிடே ஸ்பாட் எது என்று நடிகை ஸ்ரீப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் பதவியை அடைந்திட துடித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேருந்துகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்து வைத்தார்.
அவர் சிறைக்கு சென்றுவிட்டாலும் அங்கிருந்து கொண்டே தமிழகத்தை ஆட்சி செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.

எடப்பாடி
தமிழக சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
|
ஸ்ரீப்ரியா
முதல்வருக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அடுத்த 15 நாட்களுக்கு எந்த ஹாலிடே ஸ்பாட்? என்று கேட்டுள்ளார்.
|
நியூஸ் சேனல்கள்
தமிழக பிரச்சனை முடிந்துவிட்டதாக தேசிய செய்தி சேனல்கள் தெரிவிக்கின்றன. பிரச்சனையே தற்போது தான் ஆரம்பிக்கிறது என்பது அவைக்கு தெரியவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் கூறுங்கள் மக்களே என்று ட்வீட்டியுள்ளார் ஸ்ரீப்ரியா.

சந்தேகம்
அடுத்த 15 நாட்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் எந்த ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுவார்களோ என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ள நேரத்தில் அதை வெளிப்படையாக கேட்டுள்ளார் ஸ்ரீப்ரியா.