கோடிகளில் சொத்து இருந்தும் அனுபவிக்க மனமில்லை.. கஞ்சமாக வாழும் மிருணாள் தாகூர்.. காரணம் தான் ஹைலைட்!
சென்னை: நடிகை மிருணாள் தாக்கூர், தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தனது அழகு மற்றும் நடிப்பின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவராக உள்ளார். குறிப்பாக, 'சீதாராமம்' திரைப்படம் தென்னிந்தியாவில் அவருக்கு ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அந்த படத்திற்குப் பின்னர் அவர் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போது தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா என அவர் கொஞ்சம் பிசியான நடிகையாகத்தான் வலம் வருகிறார்.
இந்நிலையில், மிருணாள் தாக்கூர் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் ஸ்டைலாகவும் அழகாகவும் தோற்றமளிக்கும் மிருணாள், தனது அன்றாட வாழ்க்கையிலும் ஆடம்பரமாகவே வாழ்வதைப் போல காட்சி அளிக்கிறார். குறிப்பாக விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த சூழலில், மிருணாள் தாக்கூர் தனது ஆடைகள் குறித்த ஒரு வியப்பூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார். விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், எத்தனை விலை கொடுத்து ஆடைகள் வாங்கினாலும், அவை பெரும்பாலும் அலமாரியிலேயே முடங்கிக் கிடக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சமீபத்திய நேர்காணலில், தான் வாங்கியதிலேயே அதிக விலை கொண்ட ஆடை வெறும் ரூபாய் 2 ஆயிரம் மட்டுமே என்று அவர் கூறியது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கஞ்சத்தனம்: ஒரு முன்னணி நடிகையாக இருந்தும், கோடிகளில் சம்பளங்கள் வாங்கியும் இவ்வளவு குறைந்த விலையில் ஆடைகள் வாங்குவதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திரைப்பட விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் மிருணாள் தாக்கூர் லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருகிறார். ஆனால் அவை அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும், விலை உயர்ந்த ஆடைகளை வாங்க அவருக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது சம்பாத்தியத்தை வகைவகையான உணவு மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்யவே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களும் இணையவாசிகளும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை இவ்வளவு கஞ்சத்தனமாக இருக்க கூடாது என்று விமர்சித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











