Sai Pallavi: சாய் பல்லவிக்கு என்ன ஆச்சு? அமரனுக்கு அப்புறம் ஆளையே காணோமே.. தமிழ் பக்கம் எட்டிப் பார்ப்பாரா?

சென்னை: நடிகை சாய் பல்லவி, என்றாலே நடிகைகளிடம் நடிப்பை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர். பல வெற்றிகரமான திரைப்படங்களில் நாயகியாக நடித்து, தான் நடித்த மொழிகள் அனைத்திலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இதுவரை அவர் தேர்ந்தெடுத்த அனைத்து திரைப்படங்களுமே அவரது திரை வாழ்க்கையில் மட்டும் இல்லாமல், அந்ததந்த மொழிப் படங்களிலும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவியின் சினிமா பயணம் மற்ற நடிகைகளை காட்டிலும் தனித்துவமானது. பல முன்னணி ஸ்டார் படங்களின் கவர்ச்சி நாயகியாக நடித்து அவர் இன்றைக்கு முன்வரவில்லை. அதே சமயம், நாயகிக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களிலும் அவர் நடித்ததில்லை. ஒரு படத்தில் சாய் பல்லவி இருக்கிறார் என்றாலே அந்த படத்திற்கு நம்பிப் போகலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளார்.

கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன் என்ற கண்டிப்பான கொள்கையுடன் இருக்கும் வேறு எந்த நடிகையும் தென்னிந்திய திரையுலகில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியதில்லை என்று கூறலாம். சாய் பல்லவியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'அமரன்' . சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

Why Actress Sai Pallavi Not Commit Tamil Films After Amaran
Photo Credit:

சிம்பு படம்: ஆனால், இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் சாய் பல்லவி இன்னும் கமிட் ஆகவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்காக சாய் பல்லவியை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த படத்தை சாய் பல்லவி வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாகவும் பேச்சும் உள்ளது. கடந்த வாரத்தில், சாய் பல்லவிக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்தது. விருது பெற்ற மற்ற கலைஞர்கள் பலர் அரசுக்கு நன்றி தெரிவித்த நிலையில், சாய் பல்லவி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. முன்னதாக, 'அமரன்' படத்தில் இவர் இணைந்து நடித்த கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கும் சாய் பல்லவிக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. 'அமரன்' படத்தின் வெற்றிக்கு சாய் பல்லவிக்கு அதிக பாராட்டு கிடைத்தது.

Take a Poll

பாராட்டு: அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் கதாநாயகன் கதாபாத்திரத்தை விட சாய் பல்லவியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பெரும்பாலான ரசிகர்களின் பாராட்டு சாய் பல்லவிக்கு கிடைத்ததால், அது சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை என வதந்திகள் பரவின. ஆனால், இது குறித்து சிவகார்த்திகேயனோ, சாய் பல்லவியோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தற்போது சாய் பல்லவி நடிக்கும் பல படங்களில் கதாநாயகனை விட அவருக்கே அதிக பாராட்டு கிடைக்கிறது. 'அமரான்' படத்திற்குப் பிறகு தெலுங்கில் 'தண்டேல்' என்ற படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தார். இந்தப் படத்திலும் நாக சைதன்யாவை விட சாய் பல்லவிக்கே அதிக பாராட்டு கிடைத்தது. இன்று சாய் பல்லவி, கதாநாயகனுக்கு சமமான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மலையாளத் திரைப்படமான 'பிரேமம்' மூலம் சாய் பல்லவி, நடிகையாக தனது திரை வாழ்க்கையை தொடர்ந்தார். 'பிரேமம்' படத்திற்குப் பிறகு, அவர் தமிழ், தெலுங்கு திரையுலகில் நுழைந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X