நான் ஏன் சிம்புவுக்கு ஓகே சொன்னேன்?: தமன்னா
சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட காரணத்தை தமன்னா தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தமன்னாவும் நடிக்கிறார். தர்மதுரை, தேவி படங்கள் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கும் தமன்னா சிம்பு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் படத்தில் நடிகையாக வருகிறேன். மிகவும் துடிப்பான கதாபாத்திரம்.
சிம்புவுடன் மரத்தை சுற்றி பாட்டு பாடும் ஹீரோயின் அல்ல. அதனால் தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











