Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாப்பாடு சரியில்லை, ஹோட்டல் சரியில்லை என்று மல்லுக்கட்டிய வரலட்சுமி?
சென்னை: அப்பா படத்தின் மலையாள ரீமேக்கில் இருந்து வரலட்சுமி சரத்குமார் ஏன் விலகினார் என்று இயக்குனர் சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளதாக மலையாள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமுத்திரக்கனி இயக்கி, நடித்த அப்பா படம் மலையாளத்தில் ஆகாச மிட்டாயீ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படம் மூலம் சமுத்திரக்கனி மலையாள திரையுலகில் இயக்குனராகியுள்ளார்.
சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்து வருகிறார்.
வரலட்சுமி
ஜெயராம் ஜோடியாக வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்தனர். ஆணாதிக்கமிக்க, இங்கிதமில்லா தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க முடியாது என்று கூறி அவர் படத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
சமுத்திரக்கனி
வரலட்சுமியை தங்க வைத்த ஹோட்டல் அவருக்கு பிடிக்கவில்லை. அவர் பெரிய ஸ்டார் ஹோட்டல் கேட்டார். ஹோட்டல் சரியில்லை, சாப்பாடு சரியில்லை என்றார் என சமுத்திரக்கனி கூறியதாக மலையாள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படம்
சின்ன பட்ஜெட் படம் என்பதால் தயாரிப்பாளரால் வரலட்சுமி கேட்ட ஸ்டார் ஹோட்டலில் அவரை தங்க வைக்க முடியவில்லை. இதையடுத்து வரலட்சுமி உதவி இயக்குனருடன் சண்டை போட்டு படத்தை விட்டு விலகினார் என்று சமுத்திரக்கனி கூறினாராம்.
மஹா சுபைர்
ஆகாச மிட்டாயீ படத்தை மஹா சுபைர் தயாரித்து வருகிறார். வரலட்சுமி படத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் கதாபாத்திரத்தில் இனியா நடித்து வருகிறார்.