பயத்தால் தமிழில் பேசுவது இல்லை: ஹன்சிகா
சென்னை: பயத்தால் தமிழில் பேசுவது இல்லை என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
ஹன்சிகா ஜெயம் ரவி, அரவிந்த் சாமியுடன் சேர்ந்து நடித்துள்ள போகன் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கை நிறைய படங்கள் வைத்திருந்தவர் தற்போது பிசியாக இல்லை.

தமிழ் படங்களில் நடித்தாலும் ஹன்சிகா தமிழில் பேசுவது இல்லை. இது குறித்து அவர் கூறுகையில்,
தமிழ் மொழியை கற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் வார்த்தைகளை தவறாக உச்சரித்துவிட்டால் அர்த்தமே மாறிவிடுமே. அந்த பயத்தாலேயே தமிழில் பேசுவது இல்லை. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.
ஹன்சிகா தீபாவளி பண்டிகையை மும்பையில் தான் தத்தெடுத்துள்ள 31 குழந்தைகளுடன் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











