Don't Miss!
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
மீனாவுக்கு கிடைத்தது போல.. சமந்தாவுக்கு ஆறுதல் சொல்ல ஒரு தோழி கூட சினிமாவில் கிடைக்கலையா?
சென்னை: நடிகை சமந்தா கண் கலங்கி "நான் அவ்ளோ சீக்கிரத்துல செத்துட மாட்டேன்" என சொன்ன வீடியோ வெளியான பின்னர் கூட எந்தவொரு முன்னணி நடிகையும் சமந்தாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லையே ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
போண்டா மணி உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பல பிரபலங்கள் அவரை சென்று சந்தித்தனர்.
ஆனால், சமந்தா தனக்கு அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வெளிப்படையாக சொன்ன பிறகும் கூட முன்னணி நடிகர்கள் ஒரு சிலரை தவிர ஒட்டுமொத்த திரைத்துறையும் பெரிதாக கண்டு கொள்ளாதது ஏன்? என்கிற கேள்வியை சமந்தா ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
யசோதா பிரீ தியேட்டர் பிசினஸ்… கெத்து காட்டிய சமந்தா… மிரண்டு போன திரையுலகம்…
மீனாவுக்கு சக நடிகைகள் ஆறுதல்
சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், உடனடியாக ரம்பா உள்ளிட்ட சக நடிகைகள் ஓடிப் போய் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். ராதிகா சரத்குமார், ஸ்ரீதேவி, பிருந்தா மாஸ்டர் உள்ளிட்ட பலர் சமீபத்தில் நடிகை மீனாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவரது பிறந்தநாள் அன்று அவரை சந்தோஷமாக வைத்துக் கொண்டதை பார்க்கவே சினிமாவில் இத்தனை நல்ல நண்பர்களை சேமித்து வைத்திருக்கிறாரே என எண்ணத் தோன்றியது.
சமந்தா கண்ணீர் விட்டும்
ஆனால், அதே சமயம் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என அறிவித்த நிலையில் கூட ஒரு சக நடிகை கூட சமந்தாவை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறவில்லையே ஏன் என்கிற கேள்வியை சமந்தா ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கா நடிகைகள் ஷூட்டிங்கில் பிசி என்றும் விளாசி வருகின்றனர்.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்
நடிகை நயன்தாரா உடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து நடித்து இருந்தார் சமந்தா. ஆனால், சமந்தா கண் கலங்கி அழுததை பார்த்த நிலையிலும், சமந்தாவுக்கு ஆறுதலாக அவரை நேரில் சென்று சந்தித்து இருக்கலாமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகையர் திலகம், சீமராஜா உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்திருந்தார் சமந்தா ஆனால், கீர்த்தி சுரேஷ் ஒரு ட்வீட் கூட சமந்தாவை தேற்றும் விதமாக போடவில்லையே ஏன்? என்றும் புஷ்பா பாடலின் வெற்றிக்கு உதவிய சமந்தாவை ராஷ்மிகா மந்தனாவும் கண்டு கொள்ளவில்லையே ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
போட்டி ஒழிந்தது
பிசினஸ் மைண்ட் உடன் இந்த காலத்து நடிகைகள் இயங்கி வருவதாகவும், நமக்கு ஒரு போட்டி ஒழிந்தது என்று வேண்டுமானால், சந்தோஷப்படுவார்களே தவிர நேரடியாக சென்று சக நடிகைக்கு என்ன ஆச்சுன்னு ஒரு எட்டுப் போய் பார்த்து விட்டு வர முடியாது என சமந்தாவுக்காக மற்ற நடிகைகளை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
சமந்தா ட்வீட்
உடல்நிலை முடியாத நிலையிலும், தனது நடிப்பில் உருவாகி உள்ள யசோதா படம் பெரு வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார் சமந்தா. நாளை சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த யசோதா படம் வெளியாகும் நிலையில், fingers crossed போட்டோவை தற்போது ட்வீட் செய்திருக்கிறார் சமந்தா. நிச்சயம் அவரது உழைப்பு வீணாகாது என ரசிகர்கள் முழு ஆதரவை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.