இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்காமல் உள்ளார் என நடிகை கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நடிகை கவுதமி பல கேள்விகள் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் பிரதமர் அலுவலகமோ தங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்கிறது.

நான் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் இல்லை எனக் கேட்டு கவுதமி அறிக்கை வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்களோ, சாதாரண குடிமக்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருப்பது தான் பிரதமரின் வேலையா என்றார்கள்.
இந்நிலையில் மோடி சாதாரண குடிமகனுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளதை மேற்கோள் காட்டி கவுதமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு PM @narendramodi குடிமக்களின் ட்வீட்களுக்கு பதில் அளிக்கிறார் பின் ஏன் #JusticeForAmma #JusticeForTN பதிலில்லை ?
முக்கியமில்லையா? என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











