அவ மட்டும் என் கையில கிடைச்சான்னா... கீர்த்தி சுரேஷை கரித்துக்கொட்டும் ரகுல்ப்ரீத்!
இந்த நடிகைகளுக்குள் வாய்ப்பு பிடிக்கும் போட்டி நடக்கிறதே, அது உலகப்போரை விட பெரியது. எல்லாவிதமான வேலைகளையும் பார்த்து வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நடத்துகிறார்கள். பார்வதி மேனன் போன்ற சில நடிகைகள் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.
அப்படி சமீபத்திய மோதல் கீர்த்தி சுரேஷும் ரகுல்ப்ரீத்சிங்கும். தமிழில் அறிமுகமாகி சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்குக்கு போய் அங்கே பிரகாசித்த ரகுல்ப்ரீத் சிங், இப்போது தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அப்படி ஆர்வம் காட்டிய வேகத்திலேயே இரண்டு படங்களிலும் நடிக்க வாய்ப்பு பெற்றுவிட்டார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படமும் ஒன்று.

இங்கே முன்னணி நடிகையாகி விட்ட கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க காய் நகர்த்தினார். அப்படி அவர் வாங்கிய வாய்ப்பில் தான் பலியாகி இருக்கிறார் ரகுல்ப்ரீத்சிங்.
நானி நடிப்பில் நேனு லோக்கல் என்ற படத்தில் நடிக்க ரகுல்ப்ரீத் சிங் கமிட் ஆனார். இடையில் என்ன நடந்ததோ ரகுல்ப்ரீத் தூக்கப்பட்டு அவருக்கு பதில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுதான் ரகுல் ப்ரீத்தின் கீர்த்தி சுரேஷ் மீதான கோபத்துக்கு காரணம்.


Click it and Unblock the Notifications











