சினிமாவாகிறது சதாம் உசேன் எழுதிய நாவல்கள்!

By Sudha

Saddam Hussein
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் எழுதிய நாவல் ஹாலிவுட்டில் சினிமாவாக எடுக்கப்படுகிறது.

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் 24 வருடங்கள் ஈராக்கை ஆண்டார். ஆனால் ரசாயண குண்டுகளைத் தேடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்.

இவர் அதிபராக இருந்த போது 1979 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 4 கதைகளை எழுதி புத்தகங்களாக வெளியிட்டார். அவை ஈராக்கில் பெருமளவில் விற்று சாதனை படைத்தன.

இந்த நிலையில் அவர் எழுதிய 'ஷபீபா அண்டு தி கிங்', 'புரூனோ' ஆகிய கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்படுகன்றன. இவற்றை பிரபல பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் படங்களாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இவற்றை இயக்குனர் சாஜா பரோன் கோகென் இயக்குகிறார். நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சர்வ சக்தி வாய்ந்த ஒரு ஆட்சியாளர் சாதாரண பெண்ணிடம் காதல் வயப்படுவதுதான் சதாமின் கதையின் மையக் கரு.

படத்தை இயக்கும் கோகென் ஏற்கெனவே 'பாரோட்' என்ற படத்தை இயக்கி புகழ் பெற்றவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X